வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

தமிழுணர்வு இயக்கங்களுக்கான பொறுப்புகள்

தமிழகத்தின் தந்தையான ஈ.வே.ராமசாமிப் பெரியாரின் கூறியபடி அரசியல் கட்சிகள் என்றாலே அவர்கள் ஓட்டுப் பொறுக்கிகள். இந்த ஓட்டுப் பொறுக்கிகள் ஓட்டுக்காக எதையும் செய்வார்கள். தற்போது தமிழுணர்வு கட்சிகள் தன்னம்பிக்கை இல்லாமல், மற்ற கட்சிகளுக்காக காவடி தூக்கிக் கொண்டு உள்ளன. எனவே இதை கருத்தில் கொண்டும், மக்களின் மனநிலை, அவர்களை கையாள்வது என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்ட செயல் திட்டவடிவம்.

தமிழக சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - ௨௩௪ (234)

தி.மு.க கூட்டணியில் உள்ள தமிழுணர்வுக் கட்சிகள் வி.சி., பா.ம.க மற்றும் சில இக்கூட்டணியில் இணைந்து இருப்பதால் ஒரு ஆதாயம், போட்டியின்றி வீழ்த்தும் வாய்ப்பு உள்ளது. மொத்தம் உள்ள தொகுதியில் ௧௮௰ (180) தொகுதிகள் வரை தி.மு.க, காங்கிரசு போட்டியிடும். மீதமுள்ள சுமார் ௫௰ (50) தொகுதிகளில் இக்கட்சிகள் போட்டியிடும். இந்த ௫௰ (60) தொகுதிகளில் தமிழுணர்வு இயக்கங்கள், தமிழின இரண்டக கட்சியான திமுக மற்றும் தமிழின எதிர்ப்பு கட்சியான காங்கிரசிற்கு எதிரான பரப்புரை தேவைப்படாது.

அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் உள்ள ம.தி.மு.க மற்றும் சில கட்சிகளுக்கும் இதே போல ௬௰ (60) சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும். ஒரு நிபந்தனையின் பேரில் தொகுதி பங்கீடு செய்ய வேண்டும். அது தி.மு.க கூட்டணியில் உள்ள தமிழுணர்வு கட்சிகளின் போட்டியிரும் தொகுதியில் அ.இ.அ.தி.மு.க வில் உள்ள தமிழுணர்வுகட்சிகள் போட்டியிடக்கூடாது. குறைந்த பட்சம் இந்த அடிப்படையிலாவது தேர்தலை சந்திக்க வேண்டும். இந்த அடிப்படையில் போட்டியிடுவதால் இரண்டு பலன்கள். இனப்படுகொலைகாரர்களின் பலத்தை போட்டிக் களத்திற்குப் போகும் முன்னரே குறைக்கவும், களத்தில் குறைக்கப்பட்ட தொகுதிகளில் அவர்களின் கோர முகத்தை மக்களுக்கு, ஒவ்வொரு மக்களுக்கும் காட்ட இயலும். மொத்தமாக ௧௰௰ (100)க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் போது புதிய அணியாக உருவாக வாய்ப்பு உள்ளது. (இந்த நிலையைக் கையாளும் போது தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. ஒன்றிணைந்து சதி செய்யவும் வாய்ப்புள்ளது).

இதைவிடுத்து தனியாக பொது வேட்பாளர் என்றால், மேலும் பிரிந்திருப்பது நமது பலவீனத்தை காட்டுவது மட்டுமல்ல மக்கள் மேலும் குழம்பி, ஓட்டுக்கள் பிரிந்து இனப்படுகொலைகாரர்களுக்குச் சாதகமாக அமையும். இது கருணாநிதியின் சூழ்ச்சிகளில் ஒன்று என்பதை உணர வேண்டும். சில சிக்கல் மிகுந்த இக்கட்டான சூழ்நிலைகளில் மிகப் பொறுமையாக சாதுரியமாக சகிப்புத்தன்மையும் நகர்வுகளை நகர்த்த வேண்டியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக