செவ்வாய், 17 ஜனவரி, 2012

காலச்சுவடின் வன்மம்


http://www.kalachuvadu.com/issue-145/page14.asp

//ஆரம்பத்தில் பிரபாகரனை, இந்தியா எந்தவகையிலும் நிராகரித்திருக்கவில்லை. ஆனால் ஒரு தீர்வுக்குள் கொண்டுவரவே எத்தனித்தது. ஆனால் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகள் உண்மையான தேவைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கும் தயாராக இருந்ததாகவே சில பதிவுகள் கூறுகின்றன. விடுதலைப் புலிகளின் தேவை ஒரு நடைமுறை ஈழ அரசு (De-facto-State) என்றாலும், அது குறித்துக் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் தயாராக இருக்கிறேன் - இவ்வாறு முரசொலி மாறனிடம் ராஜீவ் காந்தி குறிப்பிட்டிருக்கிறார் (டி. பி. எஸ். ஜெயராஜ்). வட இந்தியத் தலைவரான ராஜீவ் காந்தியால் இந்தளவு இறங்கிவர முடிந்திருக்கிறது. ஆனால் மறுபுறமாகப் புலிகள் பக்கத்தில் அது குறித்துப் போதுமான நெகிழ்ச்சியோ புரிதலோ இருந்திருக்கவில்லை. இதற்காக இந்திய அமைதிப் படை பொதுமக்களுடன் நடந்து கொண்ட முறைகளை, இந்தக் கட்டுரையாளர் ஏற்பதாக அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. சில தவறுகள் இடம்பெற்றுள்ளன என்பதை மறுக்ககவுமில்லை.//

மேற்கண்ட பத்தியில்
//வட இந்தியத் தலைவரான ராஜீவ் காந்தியால் இந்தளவு இறங்கிவர முடிந்திருக்கிறது. //
பிறகு

//இந்திய அமைதிப் படை பொதுமக்களுடன் நடந்து கொண்ட முறைகளை, இந்தக் கட்டுரையாளர் ஏற்பதாக அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. சில தவறுகள் இடம்பெற்றுள்ளன //
என்று குறிப்பிடுகிறார்.

இதிலிருந்த தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று இந்தியாவின் வழிகாட்டு நூலான மனுநீதி சாஸ்திரப்படி சூத்திரனுக்கு எந்த உரிமையும் கிடையாது. பிராமணன் ஏதாவது கொடுத்தால் பெற்றுக் கொள்ளலாம். இதை மீறுகிற பட்சதத்தில் அவனைக் கொல்லலாம். அந்த அடிப்படையில் சூத்திரனான பிரபாகரன் எந்த உரிமையையும் கேட்கக் கூடாது. எதைக் கொடுக்கலாம் என்று முடிவு செய்ய வேண்டியது ராசிவ். ராசிவ் சொன்னதைக் கேட்காத பிரபாகரனையும் பிரபாகரனை ஆதரித்த மக்களையும் கொல்லலாம். அது தவறல்ல அவ்வாறு மக்களைக் கொன்ற போது இந்திய இராணுவத்தினர் பின்வாங்கியது பலரை இழந்தது. ஆயுதங்களைப் பறி கொடுத்தது இவைதான் இந்திய அமைதிப்படை செய்த சில தவறுகள். சிறு குழந்தைகள் இளம் பெண்கள் வயதான பெண்கள் என்ற பாகுபாடின்றி பாலியல் பயங்கரவாத்தை நடத்தி கொன்றது ஒன்றும் தவறல்ல. ஏனென்றால் அவர்களெல்லாம் சூத்திரர்கள். யாழ்பாண மருத்தவமனையில் புகுந்து நோயுடையோர் மருத்துவர் என்று ஒருவர் கூட மிச்சமில்லாமல் கொன்றது தவறே அல்ல. பிரபாகரனைக் கொல்ல இந்தி்ய அமைதிப்படையின் தளபதியான ஹர்கிரத் சிங் என்பவரிடன் பிரபாகரனைக் கொல்லக் கூறியதும் பார்வையில் படக்கூடாத செய்திகள்.

ராஜபக்சே உள்நாட்டு விவாகரங்களில் அந்நிய நாடுகளின் தலையீட்டை விரும்பவில்லை அவர் அதை நிராகரித்திருக்கிறார். ஆனால் இந்தியா தனது வல்லாதிக்கத்தைப் பயன்படுத்தி ராஜபக்சேவை மிரட்டி பணியவைத்து தனது குறிக்கோளை நிறைவேற்ற ஆரம்பித்தது. பிறகு இந்தியாவின் பிடியில் இருந்து விலக சீனா பாகிஸதான் போன்ற இந்திய எதிர்ப்பு நாடுகளிடம் உறவை வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தது. அந்த அடிப்படையில் இந்தியாவின் அதிகாரம் செல்லாக் காசாகிப் போனது.. மேலும் இனப்படுகொலைக்கு இந்தியாவே காரணம் என்பதற்கான சான்றுகள் இலங்கையின் வசம் இருப்பதால் தனது வாலை சுருட்டி இலங்கைக்கு கட்டுப்பட்டு உள்ளது. வலியச் சென்று நிதி உதவி செய்கிறது. இலங்கையை இனப் படுகொலைக் குற்றச்சாட்டில் இருந்து காப்பாற்ற போராடுகிறது. இந்த அப்பட்டமான உண்மைகளை மறைக்க இந்திய அரசின் முயற்சிக்கு ஒரு ஒத்துழைப்பு இந்த கட்டுரை.

மேற்கண்ட கட்டுரையில் புலிகளைப்பற்றிய விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த செய்திகளை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இல்லை. இக்கட்டுரையிலேயே நார்வேவின் துர்துக் குழு என்பது இந்தியாவின் பினாமி என்று கூறப்பட்டுள்ளது. எனவே அது இந்திய ஆதரவு என்ற நிலையிலேயே இருக்கும். நேர்மைதன்னை இருக்காது

எனவே இந்த மதிப்பீடு என்பது இந்திய அரசின் மதிப்பீடாகவே காணமுடிகிறது.