திட்டக்கமிசன் இந்தியாவில் கிராமப்புறத்தில் 27க்கு மேலும் நகரங்களில் 33 மேலும் வருவாய் ஈட்டினால் வறுமைக் கோட்டுக் மேலே இருப்பதாக கணக்கிட வேண்டும் என கூறியுள்ளது.
வறுமைக் கோட்டின் எல்லைக் கோட்டை எந்த அடிப்படையில் தீர்மாணித்தார்கள் என்ற விளக்கம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
வறுமைக் கோட்டுக்கான எல்லைக் கோட்டை குறிப்பிட்ட ரூபாயாக நிர்ணயிப்பதைவிட தன்னுடைய வருவாயில் எவ்வளவு விழுக்காடு உணவிற்காகவும், எவ்வளவு விழுக்காடு மற்ற அத்தியவசியத் தேவைக்காகவும் செலவு செய்கிறார்கள் என்ற அடிப்படையில் கணக்கிட்டால் சரியாக இருக்கும்.
உதாரணத்திற்கு
பட்டிக்காட்டில் ஒருவரின் மாதவருமானம். (ஆண்டின் சராசரி) 3000.00
வறுமைக் கோட்டின் எல்லைக் கோட்டை எந்த அடிப்படையில் தீர்மாணித்தார்கள் என்ற விளக்கம் பலராலும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
வறுமைக் கோட்டுக்கான எல்லைக் கோட்டை குறிப்பிட்ட ரூபாயாக நிர்ணயிப்பதைவிட தன்னுடைய வருவாயில் எவ்வளவு விழுக்காடு உணவிற்காகவும், எவ்வளவு விழுக்காடு மற்ற அத்தியவசியத் தேவைக்காகவும் செலவு செய்கிறார்கள் என்ற அடிப்படையில் கணக்கிட்டால் சரியாக இருக்கும்.
உதாரணத்திற்கு
பட்டிக்காட்டில் ஒருவரின் மாதவருமானம். (ஆண்டின் சராசரி) 3000.00
3,000.00 | 100.00% | வருமானம். |
1500.00 | -50.00% | உணவிற்கு |
500.00 | -16.00% | வீட்டுவாடகை |
500.00 | -16.00% | உடை மற்றும் இதர அத்தியாவசிய செலவினங்கள் |
200.00 | -6.66% | போக்குவரத்து |
200.00 | -6.66% | மருத்துவம் |
எனக் கணக்கிட்டால் ஓரளவு கணிக்க இயலும்.
இதில் நகர்ப் புறங்களில் உணவிற்காகும் செலவைக் காட்டிலும் போக்குவரத்து மற்றும் உடைக்கான செலவு அதிகமாக இருக்கும். காரணம் அவரின் பணியின் தன்மையைப் பொருத்து.
மேலும் ஒருவரின் வருமானத்தை எத்தனை பேர் சார்ந்திருக்கிறார்கள். என்பதைப் பொருத்தும் வறுமைக் கோட்டின் எல்லை மாறுபடும்.
இது போக கடனுக்கான வட்டியும் சேர்க்க வேண்டியுள்ளது (இந்தியாவில் அனைவரும் கடனானிகளாக மாறிக் கொண்டிருப்பதால்)