செவ்வாய், 26 மே, 2015

எது நல்ல பள்ளி - வாங்க பேசலாம் மின் நூலின் பதில்



அரசு பள்ளி என்றும் தனியார் பள்ளி என்றும் இரு வகைப் படுத்தியுள்ளீர்கள். ஆனால் அரசு உதவி பெறும் பள்ளிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டிருக்கலாம்

தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் அரசு பள்ளி ஆசிரியர்களே என்று குறிப்பிட்டுள்ளீர்.  தகுதியின் அளவு கோலாக நாம் எடுத்துக் கொள்வது கல்வித் தகுதி மட்டுமே.  ஆனால் உடல் தகுதி, உளவியல் தகுதி போன்ற தகுதிகளும் உள்ளன. அவை குறித்து நாம் கண்டுகொள்வதே இல்லை. இதில் குறிப்பாக உளவியல் தகுதி கிட்டத்தட்ட அனைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கிடையாது.

அரசுப்பள்ளிகளில் ஆசிரியர் பணிக்கு சேர்ந்த உடனே அவர்களுக்கு பணி ஓய்வு பெற்ற மனநிலைக்கு வந்து விடுகின்றது.  “மணியடிச்சா சாப்பாடு மயிர் மொளச்சா மொட்டை” என்பது போல தேதியான சம்பளம் வாரமான, வருடமான விடுமுறை என்ற அளவில் முடக்கப்பட்டு விடுகின்றனர்.

ஆசிரியர் பணி மட்டுமல்ல அனைத்து அரசு சார்ந்த பணிகளுக்கும் அந்தந்த பணி சார்ந்த தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் படுவதில்லை.  முழுக்க முழுக்க தன் கட்சி சார்ந்த, ‘தேவை’ சார்ந்த தகுதிகளைப் பார்த்துதே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே அப்பணியின் முக்கியத்துவம் குறித்த புரிதலோ அக்கரையோ இல்லாதவர்களே வந்து ‘ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்’. அந்த புரிதலும் அக்கரையுள்ளவர்கள் தானாகவே “புறந்தள்ளப்படுகின்றனர்”.

அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைவிற்கு காரணமாக நான் என் அனுபவத்தில் கண்டது ஆசிரியர்களே. இது குறித்த பதிவை http://thiruvidam.blogspot.in/2013/07/blog-post.html இல் தெரிவித்துள்ளேன். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வித்தகுதி இல்லை என்றாலும் அவர்களுக்கு என்று கண்காணிப்பு உள்ளது. ஆனால் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எந்த வித கண்காணிப்பும் இல்லை. அப்படியே இருந்தாலும் அது பெயரளவில் மட்டுமே உள்ளது. இந்த நிலை அரசுப்பள்ளி என்று மட்டுமல்ல அரசின் அனைத்துத் துறைகளிலுமே இதே நிலை. இதற்கு அடிப்படைக்காரணம் இரண்டு.  1) தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் பணியாளர்களாக இல்லாமல் கட்சியினராக இருப்பது.  2) மக்கள் கண்காணிக்காமல் இருப்பது.(இது குறித்து ஆழமாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது)

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்களுக்கென்று சங்கங்களை அமைத்துள்ளனர். பல்வேறு போராட்டங்களை நடத்தி தங்களுடைய கோரிக்கைகளை பெற்றுள்ளனர்.  அவற்றில் ஏதேனும் ஒன்றாவது அரசுப்பள்ளிகளின், துறையின் மேம்பாடு குறித்து உள்ளதா என்றால் ஒன்று கூட கிடையாது.  அவர்கள் போராடியது முழுக்க தன்னுடைய தனிப்பட்ட சுகத்திற்கானதாக இருக்கிறது. நலன் என்பதற்காக என்றால் கூடப் பரவாயில்லை சொகுசிற்கும் சுகத்திற்குமாக “நலன்” என்ற பெயரில் போராடுகின்றனர்.  பணி நேர குறைப்பு, ஊதிய உயர்வு, வேலை நேர குறைப்பு, குற்றத்திற்கு இழைத்தால் அதற்கு தண்டனை தவிர்க்கு என்ற அளவில் மட்டுமே உள்ளது.  ஊழியர் என்றால் தன்னலன் பாராமல் உழைப்பது என்று பொருள். ஆனால் ‘அரசு ஊழியர்கள்’ என்றால் முதலாளி மனோபாவம் வந்து விடுகிறது. மற்ற எதைப்பற்றியும் கவலைப்படாமல் இலாபத்தை மட்டுமே குறிக்கோளால செயல்படுவது முதலாளித்துவம்.  அரசுத்துவம் என்பது மற்ற எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் தன் சுகத்திற்காகப் மட்டுமே பணிக்கு என்ற பெயரில் சேருவது என்ற நிலை.

அத்தியாயம் 5ல் ஆசிரியர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.  ஆட்சியாளர்கள் ஆசிரியர்களை நியமிப்பதே மக்களுக்கு கல்வி வழங்க என்று இருந்தால் தானே. தன்னுடைய  மற்றும் கட்சியின் வருமானத்திற்கும், தனக்கான அடிமைகளைப் பெருக்கிக் கொள்ளவும் என்பதாகத் தானே உள்ளது.

அசிரியர்கள் இல்லாத அவல நிலை இது குறித்து http://thiruvidam.blogspot.in/2013/07/blog-post.html பதில் குறித்துள்ளேன்

அத்தியாயம் 8
நரியூர் ஊராட்சி பள்ளி ஆசிரியரிடம் உள்ள அக்கரையில் பொறுப்பில் ஆயிரத்தில் ஒன்று பகுதிகூட தாய்மொழி ஆய்வு கட்டுரை எழுதும் எழுத்தாளர்களுக்கு, ஆர்வலர்களுக்கு இல்லை.  அப்பள்ளி ஆசிரியரின் சேவையை பயன்படுத்தி தனக்கான ஆதாயத்தைத் தேடிக் கொள்கின்றனர்.  அது பணமாகவோ விளம்பரமாகவோ இருக்கலாம்..  அக்கரை, பொறுப்பு என்பது ஒரு அடியேனும் முன்னோக்கி வைப்பதாக இருக்க வேண்டும்.  எட்டு அடி பின்னோக்கி வைத்து விட்டு பின் புலம்பித் தீர்க்க அல்லது ஆதாயம் தேட மட்டுமே எழுத்தைப் பயன்படுத்துவதாக உள்ளது.

அத்தியாயம் 9
கல்வி அமைச்சர் அதை தெரிவித்தார் இதை தெரிவித்தார்,  அதெல்லாம் இருக்கட்டும் நீதிமன்றங்களே இன்று எப்படி உள்ளது? காவல் துறை எப்படியுள்ளது? சட்டங்களும் விதிகளும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடாது. ‘’ஏட்டுசுரைக்காய் கறிக்கு உதவாது’’ நமக்கான தேவைகளை நாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் நரியூர் ஊராட்சி பள்ளி ஆசிரியர் போல சிறிய அளவிலான முயற்சியை மாவட்டத்திற்கு ஒருவர் செய்தாலே போதுமானது. அது வளர்ந்து விரிந்துவிடும். அதற்கு ஆர்வலர்கள் தேவையான பணிகளை செய்ய வேண்டும்.  இங்கு தான் சிக்கலே. ‘தன்னை’ முன்னிலைப்படுத்துவதிலேயே அதீத ஆர்வமும் முயற்சியும் நோக்கமுமாக இருப்பதால் மற்றவர்களின் கருத்தும் தேவையும் புறந்தள்ளப்பட்டு உதாசீனப்படுத்தப்படுகிறது.  ஆழாமாக விவாதித்து ஒரு குறைந்த பட்ச உடன்பாடை ஏற்படுத்தி அடுத்த கட்ட நகர்விற்கான பணிகளை செய்வதில்லை.  தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள சம்பளமில்லா வேலைக்காரர்களாகவும், அடிமைகளாகவுமே ஆர்வலர்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். பார்வை https://www.facebook.com/notes/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/503920279692973

தொலைகாட்சி விளம்பரங்களினால் பெற்றோர் குற்ற உணர்விற்கு ஆளாகிறார்கள்.  இது உளவியல் ரீதியாக பலவீனமாக இருப்பதையே காட்டுகிறது. மேலும் இந்த நிலை தனி நபரை குறை சொல்ல முடியாது.  சமூகக் குறையே.   தனக்கென ஆதரவு இல்லாத நிலையில் கிடைத்ததை வைத்து கேட்டதை வைத்து முடிவெடுக்க வேண்டிய நிலையில் தான் இருக்க முடியும்.  திருமணமாகும் வரை அனைத்து விதங்களிலும் தோள்கொடுக்கும் சகோதர சகோதரிகள் திருமணத்திற்குப் பிறகு அப்படியே நேரெதிர் நிலைக்கு மாறும் போது ஆதரவற்ற நிலையிலும் இதுவே போட்டி மனநிலைக்கும் தள்ளப்படுவதாலும் உளவியல் ரீதியாக தன்னுடைய நிலை என்ன.? நமக்கான தேவை என்ன என்று நிதானமாக சிந்திக்க இயலாது.  எப்படிப்பட்ட சாதாரண மனிதனுக்கும் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்த ஒரு வெளி தேவைப்படுகிறது.  ஆனால் இன்று உள்ள சூழ்நிலையில் ஒவ்வொருவருக்கும் கேட்க நேரமில்லை சொல்லித்தீர்க்க வண்டிக்கணக்கில் ஆதங்கங்கள் அடக்கி வைத்திருக்கின்றனர்.  கிடைத்தவன் தலையில் கொட்டிவிட்டு ஓடிவிடுகின்றனர்.  மற்றவர்களின் மன ஆதங்கத்தை கேட்பதில்லை.  இதில் பொருளாதார அல்லது ஏதேனும் ஒரு வகையில் பலவீனமானவர்கள் சிக்கி மேலும் மேலும் பலவீனமடைகின்றனர். கொட்டிவிட்டு ஓடியவர்களும் அதிலிருந்து மீளாமல் மீண்டும் மீண்டும் கொட்டிக் கொண்டே இருக்கின்றனர்.  இது ஒரு சமூக நோயாகிவிட்டது.

பெற்றோர் தங்களின் மனநிலையை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.  எப்படி இது சாத்தியமாகும் அவர்களை சிந்திக்கவே விடுவதில்லையே?


முதலில் இன்றைய கல்விமுறையே நமக்கானது இல்லை அது மெக்கலேவால் உருவாக்கப்பட்ட அடிமைகளை குமாஸ்தாக்களை உருவாக்கவும், ஆங்கிலேயர்கள் உயர்ந்தவர்கள் ஆங்கிலம் உயர்ந்தது என்பதை நோக்கமாகவும் கொண்டு உருவாக்கப்பட்டது. மூலகாரணமான இந்த கல்விமுறை குறித்து ஆராயாமல் இன்றைய கல்விமுறை குறித்து ஆராய்வது தும்பை விட்டு வால்பிடிப்பது போன்றதாகவே இருக்கும்.  மேலும் இந்த அடிமைகளுக்கான கல்விமுறையில் கற்றவர்களே இன்றைய பெற்றோராக இருப்பதால் அவர்களால் அடிமைமுறையே சிறந்ததாக, பெருமைக்குறியதாக கருத இயலும். என்னதான் தாய்மொழிக் கல்வி குறித்து பக்கம் பக்கமாக, புத்தகம் புத்தகமாக எழுதினாலும், எழுதுபவர் கூட ஆங்கில வழி கல்வியையே தன்னுடைய குழந்தைகளுக்கு அளிக்கின்றனர்.  அதற்கு அவர்கள் கூறும் சாக்குப் போக்கு தமிழும் படிகிறன்றனர். பன்மொழிதிறன் உடையவர்களாக இருக்கின்றனர். என்று பெருமை பட்டுக் கொள்கின்றனர்.  இவ்வாறு தாய்மொழியின் தேவை குறித்து ஆய்ந்து புத்தகம் எழுதும் எழுத்தாளர்களே இந்த அழகில் இருக்கும் போது சாதாரண சாமானியர்கள் அவ்வெழுத்தாளர்களை முன்மாதிரியாக கொண்டவர்களின் நிலை????  இந்த இழி நிலைக்குக் காரணம் தன்னம்பிக்கை அற்ற எழுத்தாளர்களாக இருப்பதாலும் எழுத்தாளர்களை வெறும் எழுத்தாளர்கள் என்ற அளவில் மட்டும் அவர்களைப் பார்க்காமல் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதாலும், தாய்மொழிக்கல்வியை தன் குழந்தைகளுக்கு போராடி கொடுப்பவர்களை உதாசீனப்படுத்துவம் மிக மிக முக்கிய காரணமாக இருக்கிறது. (http://thiruvidam.blogspot.in/2013/07/blog-post.html இந்த பதிவின் பின்னூட்டத்தில் உள்ள செய்திகளைப் பார்க்கவும்)

மற்ற சில பதிவுகள்