வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

அரசு நிர்வாகம்

போராளிகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக உழைப்பவர்கள். ஆனால் அரசு என்பது ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகவே ஆன நிர்வாகம் அல்ல. ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கான நிர்வாகம். தமிழகத்தின் தந்தையான ஈ.வே.ரா அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்காகக் போராடினார். தொழில்வளர்ச்சி, கலை, இலக்கியம் போன்றவற்றிக்காக அவர் போராடவில்லை (சமூக விடுதலை இல்லையென்றால் இவற்றைப் பெற இயலாது).

ஈழத்தின் தேசியத் தலைவர் பிரபாகரன் ஈழ விடுதலைக்காக ஆயுதப் போர் நிகழ்த்தினார். அவரை தீவிரவாத இயக்கத்தின் தலைவர் என்ற குறுகிய கண்ணோட்டத்துடன் தான் உலகம் பார்த்தது. ஆயுதப் போரைக் காரணம் காட்டி மற்ற நாடுகள் நட்புறவை வளர்க்கவில்லை. ஆனால் மற்ற நாட்டு மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். அரசுகள் என்பது மக்களுக்காக என்ற நிலை மாறி அதிகார வெறிகொண்ட மனிதர்களின் கூட்டம் என்பது ப.சிதம்பரத்தின் வெற்றி அறிவிப்பின் மூலமும் Wiki Leaks இணையதளம் வெளியிட்ட ஆவணங்களின் மூலமும் தெளிவாகத் தெரிகிறது. எனவே தொழில் வளர்ச்சி மற்றும் நாட்டுக்குத் தேவையான மற்ற துறைகளில் பெரும் தேக்க நிலையில் இருந்தது. தற்போது பெரும் பின்னடைவை சந்தித்திருக்கிறது ஈழநாடு.

ஆனால் ஒரு அரசு நிர்வாகம் என்பது மற்ற நாடுகளின் அங்கீகாரத்துடன் இருக்கும் பொழுதுதான் தொழில் வளர்ச்சிக்கும் கலை இலக்கிய பரிமாற்றங்களுக்கும் வழிவகுக்கும். அனைத்து துறை மற்றும் அனைத்து இன மக்களுக்காகவும் அதன் செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

தற்காலத்தில் அரசியல் என்பது அதிகாரத்தைப்பயன்படுத்தி பணத்தை கொள்ளையடிப்பது, தொழில்துறையை கைப்பற்றுவது என்பதாக உள்ளது. சமூக நலன் என்பது துளியும் இல்லாது இருக்கிறது. அரசியல் என்பது சாக்கடையல்ல நதிநீர். நதியை துப்புரவாக வைத்துக் கொள்ளாதது நமது பிழை. இதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று தகுதிக்கு தக்கவாறு பதவிகளை வழங்காதது. எடுத்துக்காட்டு கலைஞர் கருணாநிதி. இவர் திரைப்படம் மற்றும் நாடகங்களுக்கு கதை மற்றும் உரையாடல்கள், கவிதை, கலை, இலக்கியங்கள் படைக்கும் படைப்பாளி. இவரை இலக்கிய படைப்பாளியாக மட்டும் வைத்திருந்தால் தமிழ் மொழிக்கு அணி சேர்ந்திருக்கும். ஆனால் இவரின் படைப்புகளில் மயங்கிய மக்கள், தவறுதலாக ஆட்சி அதிகாரத்தை அளித்ததால் பண சேர்க்கும் மன நோய்க்கு ஆளாகி, ஏன் எதற்கு எப்படி சேர்க்கிறோம் என்ற வரைமுறை இல்லாமல் எவ்வளவு உள்ளது என்றே தெரியாத அளவுக்கு கொள்ளையடித்து அடியற்ற வாளியில் நீரை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர் மட்டுமல்லாமல் இவரைச் சார்ந்தவர்களுக்கும் இந்நோயைப் பரப்பி வளர்த்துக் கொண்டிருக்கிறார். இந்த மனநோய் தற்போது உலக மக்கள் அனைவரையும் பீடித்திருக்கிறது. இந்நோயை நோயாகவே பார்க்க மனித இனத்திற்கு தோன்றவே இல்லை. இதன் காரணமாக, இரண்டாம் உலகப் போருக்குபின் நாகரீக வளர்ச்சியடைந்திருந்த மனித இனம், தற்போது மீண்டு்ம் காட்டுமிராண்டி காலத்திற்கு வந்து நிற்பதை ஈழப்படுகொலைகளும், Wiki Leaks இணைய தளச் செய்தியும், இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் எல்லையற்ற ஊழல்களும் வெளிப்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக