சனி, 7 ஆகஸ்ட், 2010

இட ஒதுக்கீடு

தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத்தரம் உயர அவர்களுக்கு இட ஒருக்கீடு அளிக்கப்பட்டால் உடனே உயர்ந்து விடாது. அம்மக்களின் மனப்பான்மையை மாற்ற வேண்டும். டாக்டர் அம்பேத்கார் கல்வி பயின்ற காலத்தில் இட ஒதுக்கீடு என்பது நடைமுறையில் இல்லை. சொல்லப்போனால் கல்வி மறுக்கப்பட்டது. ஆனாலும் அவர் போராடி சட்டம் பயின்று, ஒரு மாபெரும் சட்ட மேதையானார். அவருக்கு கல்வியைக் கற்ற வேண்டும் என்ற ஆர்வமும் அதைப் பெற அவருக்கு துணிச்சலும் இருந்தது. எனவே மறுக்கப்பட்ட கல்வியை போராடிப் பெற்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரம் உயர அவர்களுக்கு சலுகைகள் அளிப்பது என்பது சரியான அணுமுறையல்ல. சலுகைகள் அவர்களின் திறமையைக் குறைப்பதுடன் மேலும் அவர்களின் வாழ்க்கைத் தரமும் சமூகத்தின் தரமும் தாழ்ந்துகொண்டே போகிறது. ஒரு மனிதனின் வாழ்க்கைத் தரம் என்பது அவரின் பிறப்பின் அடிப்படையிலோ, பொருளாதாரத்திலோ அமைந்து விடுவதில்லை. மாறாக அவரின் மனப்பான்மையைப் பொருத்தே வாழ்க்கை தரம் அமைகிறது. தனது மனப்பான்மையினால் அவர் தனக்குத் தேவையான பொருளாதாரத்தைத் திரட்டிக்கொள்ளவும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளவும் முடியும்.

பொதுவாக இவர்களின் மனப்பான்மை தாழ்வு மனப்பான்மையாகவும் எதிர்மறை மனப்பான்மையாகவும் இருக்கிறது. மேலும் சோம்பலுக்குள் சிக்கிவிடுகின்றனர். தன்னிடம் உள்ளவற்றை வைத்துக் கொண்டு அவர்கள் சிறப்பாக வாழ்வதில்லை. மற்ற மக்களிடத்தில் இயல்பாக, சமமாகப் பழகுவதில்லை. சமூகத்திடமிருந்து விலகியே வாழ்கின்றனர். ஒரு காலகட்டம் வரை சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் தற்போது அப்படி இல்லை. வாய்ப்புகள் நன்றாக திறந்து விடப்பட்டுள்ள நிலையிலும் ஒதுங்கியே இருக்கின்றனர். எனது மனைவியும், அவரின் குடும்பத்தாரும் என் குடும்பத்தினருடன் கலந்து பழகுவதில்லை. விரோதிகளிடம் இருப்பதைப் போலவே எச்சரிக்கையாக இருப்பதாக கருதி ஒதுங்கியே இருக்கின்றனர். திருமணம் ஒன்றிற்கு சென்றிருந்த போது என்னுடன் பணியாற்றுகிறவரும் அவருடைய மனைவி குழந்தையையும் அழைத்து வந்திருந்தார். அவரின் மனைவியும் குழந்தையும், தலைக்கு எண்ணை தேய்த்து தலைவாராமல் வந்திருந்தார். அவர் யாருடனும் பேசாமல் தனிமையிலேயே இருந்தார். நாமாகப் போய் பேசினாலும் அவர் தவிர்க்கவே விரும்புவதாகத் தெரிந்தது. தலைக்கு எண்ணை தேய்த்து தலைவாரி வந்திருந்தாலே போதும். ஆடம்பர உடைகளோ நகைகளோ தேவையில்லை. மேலும் மற்றவர்களிடம் இயல்பாகப் பழகினாலே போதும். இதற்கு மனப்பான்மையில் மாற்றம் தேவை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக